நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப பூங்கா ஒன்றில் வட மாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் ஒடிசாவை சேர்ந்த திம்பு மாஜி மற்றும் பீகாரை சேர்ந்த கோமால் குமாரி ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை காதல் ஜோடி காணாமல் போய் உள்ளனர்.

இதனால் வட மாநில தொழிலாளர்கள் சிலர் நிறுவனத்தின் மேலாளர் விஜயநாதனிடம் அனுமதி பெற்றுவிட்டு இருவரையும் தேட துவங்கினர். பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில் நேற்று மில்லின் அருகே இருந்த காலி இடத்தில் வேப்பமரம் ஒன்றில் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி இருந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.