சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று மாலை 5.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும். அக்டோபர் 29ம் தேதி அதிகாலை நிலவும் சந்திர கிரகணத்தால் கோவில் நடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.