தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்புகளுக்கு 2530 இடங்கள் உள்ளது. இவை நடப்பு கல்வியாண்டு இணைய வழி கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில்  மாணவர்கள் நலனை கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டு முதுகலை சட்டம், மூன்று ஆண்டு LLB மற்றும் LLB ஹான்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இரண்டு ஆண்டு LLM படிப்புக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையும், மூன்று ஆண்டு முதுகலை படிப்புக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.