சங்கரய்யா மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள CPM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சங்கரய்யா உடல் நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.