
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார் ஷா. இவர் தனது மனைவி பூஜா குமாரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு பூஜா குமாரி என்ற மனைவி உள்ளார். எங்களுக்கு நான்கரை வயதில் மகள் உள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நான் பூஜாவை திருமணம் செய்தேன். பூஜா படிப்பதற்காக எனது தாயின் நகைகளை விற்று தீயணைப்பு துறையில் வேலை வாங்கி கொடுத்தேன். அதன்பிறகு வேலை பார்க்கும் இடத்தில் ராகுல் என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது.
இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பூஜா என்னையும் மகளையும் விட்டு பிரிந்து சென்று விட்டார். பூஜா ராகலுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நான் பார்த்தேன். இது குறித்து எனது மாமியாரிடம் கேட்டபோது விவாகரத்து செய்யாவிட்டால் பொய் வழக்கில் சிக்க வைப்போம் என மிரட்டுகிறார்.
எனது மனைவி, மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பங்கஜ் குமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.