கால் வைத்ததற்காக மிட்செல் மார்ஷை கண்டித்த ஊர்வசி ரவுடேலா, ‘சகோ கொஞ்சம் மரியாதை காட்டுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்..

2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியை தோற்கடித்தது. அதன் பிறகு இந்த தொடரின் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் தனது காலடியில்  உலகக் கோப்பையை வைத்தபடி பீர் குடிப்பதைப் பார்த்தபோது சமூக ஊடகங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து ரசிகர்கள்அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் மிட்செல் மார்ஷின் இந்த படம் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மற்றும் அதன் வீரர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அடிக்கடி கருத்து தெரிவிக்கும் பாலிவுட் நடிகைகளில் ஊர்வசி ரவுடேலாவும் ஒருவர். மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை அவமதிக்கும் படத்தையும், அது தொடர்பான செய்திகளையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஊர்வசி ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கோப்பையை காலில் வைத்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்து, அவரை டேக் செய்துள்ளார். அதில் அவர்,“சகோ, உலகக் கோப்பை கோப்பைக்கு கொஞ்சம் மரியாதை காட்டுங்கள். மிட்செல் மார்ஷ் குளிர்ச்சியாக இருப்பதற்காகவே தனது கால்களை அதன் மேல் வைத்துள்ளார், ”என்று அவர் படம் கட்டை விரலை கீழே வைப்பது போன்ற அதிருப்தி எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் அவர் கபில் தேவ், மிட்செல் மார்ஷ், லியோனல் மெஸ்ஸி மற்றும் தன்னைக் கொண்ட 3 படங்களை வெளியிட்டார். நடிகையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊர்வசி ரவுத்தேலாவின் இந்த பதிவை அவரது ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.