
ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குளி இறங்கினார். இந்நிலையில் கேசவனும் தீக்குழியில் இறங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.