மதுரையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மதுரை நகர் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டும் தான் செலுத்த வேண்டும். பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது. மேலும் அர்ச்சகர்கள் பணத்தை எடுப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.