கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா அன்று யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வப்த நிலையில், இனி  கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவது, தலைப்பாகை அணிவிப்பது, குடை பிடிப்பது செய்ய கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.