
தெலுங்கானா மாநிலத்தின் நாகர்நூல் மாவட்டத்தில் உள்ள உர்கொண்டபேட்டா பகுதியில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 30 வயதான பெண் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சம்பவம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது உறவினருடன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தபின், கோயிலிலேயே தங்க முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக கோயிலுக்கருகே உள்ள புதர்களுக்கு சென்ற அந்தப் பெண்ணை, சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர். சத்தம் கேட்டு உறவினர் உதவிக்காக சென்றபோது அவரையும் தாக்கி, மரத்தில் கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக உர்கொண்டா போலீசார் விசாரணை தொடங்கி, இதில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும், மொத்தம் எட்டு பேர் இந்த வன்முறையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது, மற்ற இருவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.