
கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனால் கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக அருகில் உள்ள மூலிகை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.