
திமுக சார்பில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் என்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கட்- அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.