
சமூக வலைதளங்களில் வைரலாகும் சுற்றுலா வீடியோக்கள், இயற்கையின் மத்தியில் சமைத்து உணவுசாப்பிடும் அனுபவங்களை பார்த்து, அதே அனுபவத்தை நாமும் பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் தற்போது இயற்கை இடங்களை தேடி சென்று, தாங்களே சமைத்து, அந்த அனுபவத்தை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிரும் பழக்கம் விரிவடைத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் சிலர் ஆற்றுக்கு அருகில் சுற்றுலா சென்று, அங்குள்ள பெரிய மீனைப் பிடித்து அதனை சமைக்க திட்டமிட்டனர். ஆனால் விஷயம் காமெடியாக முடிந்தது. அவர்கள் அந்த மீனை சாகும் வரை காத்திருக்காமல், துண்டுகளாக நறுக்காமல், மசாலா தடவாமல் நேரடியாக உயிருடன் இருக்கும் மீனை எண்ணெய் அடுப்பில் போட முயற்சித்தனர்.
View this post on Instagram
“>
துள்ளித்துடித்த அந்த மீன், சட்டியிலிருந்து தப்பியோடி மீண்டும் ஆற்றில் விழுந்து உயிரோடு தப்பி ஓடியது. இந்நிலையில் வீடியோ பார்த்தவர்கள் உணவுக்காக ஒரு உயிரை பயன்படுத்தினாலும், அதற்கான மனிதபிமான முறையை பின்பற்ற வேண்டும் என நெட்டிசன்கள் அவர்களது இந்த செயலை விமர்சித்து வருகின்றனர்.