மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வ வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கனமழையில் சாலையோரத்தில் நின்று காய்கறிகள் விற்பதற்காக போராடும் ஒரு ஏழைப் பெண்ணின் நிலை காணப்படுகிறது. அந்தப் பெண் பலரை தனது காய்கறிகளை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால், எவரும் கவனம் செலுத்தாமல் கடந்து செல்கிறார்கள். மழையிலும் நம்பிக்கையுடன் நின்ற அந்தப் பெண்ணை, ஒரு நபர் தூரத்தில் இருந்து கவனித்தார்.

அந்த நபர், அந்தப் பெண்ணிடம் சென்று, கிலோ கணக்கில் அல்லாமல், அவளது அனைத்து காய்கறிகளையும் வாங்கிவிட்டார். முட்டைக்கோஸ், கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளை பொதி செய்து கொடுத்த அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. மேலும் அந்த நபர், அவருக்கு பணம்  கொடுத்து உதவினார். இது மட்டும் அல்லாமல், அந்த நபர் அந்த காய்கறிகளை எடுத்துச் சென்று சாலையோரத்தில் இருந்த பசு, கன்றுகளுக்கு ஊட்டுவதாகக் காணப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hussain Mansuri (@iamhussainmansuri)

@iamhussainmansuri என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைக் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள், அந்த நபரின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் பாராட்டி கண்ணீர் விட்டு பகிர்ந்து வருகின்றனர். “இந்த நாள், அந்த பெண்ணின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிடும்” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். “தேவதை” என்றும், “இந்த மனிதனுக்குப் பெரும் மரியாதை” என்றும் பலர் உருக்கமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ, நம் சிறிய உதவியாலும் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிக்காட்டுகிறது.