விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி விழுப்புரம் இந்திரா நகர் சாலையில் மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும் சென்னை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன் தன் மனைவியை கண்டித்தார். இதனால் கோபமடைந்த தமிழரசி சங்கருடன் இணைந்து மணிகண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 14ஆம் தேதி சங்கரின் நண்பர் கார்த்திக் ராஜாவின் மனைவி ஸ்வேதா என்பவர் மணிகண்டனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கட்டுமான வேலை இருக்கிறது நான் சொல்லும் இடத்திற்கு வா என கூறியுள்ளார்.

அவர் வந்தவுடன் கார்த்திக் ராஜா, சங்கரின் மற்றொரு நண்பர் சீனிவாசன் ஆகியோர் இணைந்து மது குடித்துள்ளனர். அவர்கள் மணிகண்டன் குடித்த மதுவில் சயனைடு கலந்து கொடுத்துள்ளனர். இதனால் மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தமிழரசி, சங்கர், அவரது நண்பர்களான சீனிவாசன், கார்த்திக் ராஜாவின் மனைவி ஸ்வேதா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமுறைக்கான கார்த்திக் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.