தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மர்ம நபர்கள் தாக்கியதால் வெங்கடாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு ஜனவரி 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெங்கடாசலம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரான சிவகுமார் என்பவரை சுமார் இரண்டு மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.