கோலி -கங்குலி கைகுலுக்காமல் சென்றதற்கு ரிக்கி பாண்டிங் காரணம் என்று கூறப்படுகிறது..

ஐபிஎல் 16வது சீசனின் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.பிசிசிஐ தலைவராக கங்குலியும், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும் இருந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் கங்குலி தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். கோலி தற்போது ஆர்சிபி அணியில் ஒற்றை வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில்தான் 20வது லீக் ஆட்டத்தில் இருவரும் மீண்டும் சந்தித்தனர். அப்போது கேமரா மேன் அடிக்கடி இருவரையும் ஃபோகஸ் செய்து கொண்டிருந்தார்.

கோலி, கங்குலி சந்திப்பு:

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று கைகுலுக்கினர். அப்போது விராட் கோலியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியும் எதிரெதிர் வரிசைகளில் வந்து கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். கங்குலிக்கு முன், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கைகொடுத்து சென்றார்.

அப்போது கோலியுடன் கைகுலுக்கிய ரிக்கி பாண்டிங் எதிர்பாராதவிதமாக அவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதன் காரணமாக ஒரு நொடி காத்திருந்த கங்குலி, கோலிக்கு பின் வரிசையில் வந்த வீரர்களுக்கு திடீரென கைகொடுத்து வெளியேறினார். ஒருவேளை ரிக்கி பாண்டிங்கை நிறுத்திவிட்டு பேசாமல் நகர்ந்திருந்தால் கங்குலியும் கோலியும் கை கொடுத்திருப்பார்கள்.

இதைத் தொடர்ந்து பிரச்னை பெரிதாகியது. கோலி மற்றும் கங்குலி இருவரும் இன்ஸ்டாகிராமில் அன்பாலோ  செய்து கொண்டனர்.