பெங்களூருவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மங்களூரு -பெங்களூரு இடையான தேசிய நெடுஞ்சாலையில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பெரும்பாலும் நிரப்பியுள்ளது.பல வாகனங்கள் அதில் சிக்கியுள்ளன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

இன்று கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.அந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.