பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்துக்கு சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு விஜய பிரபாகரன் நேரில் நேற்று சென்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.