சோமாலியாவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றது. இந்த குழுக்கள் அவ்வப்போது மக்களின் மீது தாக்குதலை நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து சோமாலியா கூட்டு போர் பயிற்சி மேற்கொண்டது. இந்நிலையில் தலைநகர் மோகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயிற்சி நடந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பக்ரைன்லிருந்து ஒரு ராணுவ வீரர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மூன்று ராணுவ வீரர் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.