நடிகை குஷ்பு, 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில், குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டு நடிகை குஷ்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது குஷ்புவின் உருவப்படத்தை எரிக்க முயன்றபோது எம்எல்ஏ தமிழரசி சேலை மீது எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. அப்போது அக்கருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தாள் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.