தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மெனு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பான ஜூன் 2 அன்று பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கப்படும். அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட வேண்டும். திங்கட்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனி வியாழக்கிழமைகளில் வழங்கப்படும் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.