
தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அதன் பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு வார காலமாகும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதன் காரணமாக நாளை முதல் தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.