சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் இப்போது அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும்போது இங்கு பல்வேறு கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சி நேற்று ஸ்டீல் சிட்டி பிலாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை அவர் தாக்கி பேசியிந்தார். அதோடு அவர் தற்போது சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசாங்கத்தின் பணிகளைப் பாராட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தை போல் சத்தீஸ்கரிலுள்ள இல்லத்தரசிகளுக்கும் ரூ.500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.