முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை நினைத்து வேதனையில் இருக்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச் செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணி ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமைச்சரிடம் பேசிய பிறகு தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார்.

ஒரு முன்னாள் முதலமைச்சரையே தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியுள்ளார். அவர் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்.

பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது கண்டிக்க கூடியது. இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும் செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இப்படி தர குறைவாக பேசி வருகிறார் என விமர்சித்துள்ளார்.