
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை எதிர்த்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து திமுக கட்சியின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அனைவரும் அரசியலாக்க பார்க்கின்றனர்.மாணவியின் புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார்.
அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தப்பி விட முடியாது. சட்டம் கடமையை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக முதலமைச்சர் உள்ளார். குற்றம் செய்தவருக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு எந்த சமரசமும் செய்யாது.இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.