இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக முதலீடு செய்த பணத்தை 120 மாதங்களில் அதாவது 10 ஆண்டுகளில் இரட்டிபாக்க முடியும். கடந்த வருடம் இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 1.10% வரை உயர்த்தப்பட்டது. இதனால் மூன்று மாதத்திற்கு முன்பாகவே உங்கள் பணத்தை இரட்டிப்பு செய்து பெற முடியும். இதில் 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து தங்களது பணத்தை இரட்டிப்பாக விரும்பும் முதலீட்டாளர்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். இதில் தனியாக அல்லது கூட்டாக சேர்ந்து கணக்கை தொடங்கலாம். அது மட்டுமல்லாமல் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் பாதுகாவலர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறலாம்.இந்த திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன்பாக இறந்து விட்டால் அந்த பணம் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதையும் முன்பாகவே முதலீட்டாளர்கள் நாமினியை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.