ஹைதராபாத் குஷைகுடா பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை குப்பைகளை சுத்தம் செய்யும் போது, மர்ம வெடிவிபத்தில் 37 வயதான எஸ். நாகராஜு என்ற நபர் உயிரிழந்தார். இவர் நேதரெட் பகுதியை சேர்ந்த ராக்பிக்கர் (ragpicker) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாலையோரம் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் அருகே குப்பையை சுத்தம் செய்யும் நேரத்தில், ஒரு பழைய பெயிண்ட் கேன் வெடித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்ச்சி அளிக்கும் வெடிவிபத்தின் காட்சி அருகிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெடிப்பு ஏற்பட்ட வேகத்தில் நாகராஜு பல அடி தூரத்திற்கு வீசப்பட்டு, உடனடியாக உயிரிழந்தார். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்தினர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.