பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பாலுசிஸ்த்தான் மாகாணத்தில் நேற்று இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.