
தமிழகத்தில் பட்டாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பட்டா பெறுவது என்பது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் தமிழக அரசு இதனை எளிதாக்குவதற்காக ஆன்லைன் மூலமாக பட்டா பெரும் நடைமுறையை கொண்டு வந்தது.
அதன் பிறகு பட்டாவுக்கு விண்ணப்பித்த பிறகு விஏஓ, சர்வேயர், தாசில்தார் மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் ஒப்புதல் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இனி பட்டாவுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பட்டாவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இ சேவை மையம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உட்பிரிவு தேவை இல்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் வந்துள்ளதால் தற்போது மீண்டும் அரசு ஒருமுறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரசின் உத்தரவுப்படி 30 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.