மாலத்தீவு மிகப்பெரிய சுற்றுலா தீவாக இருக்கும் நிலையில் அந்த நாட்டின் அரசாகமே சுற்றுலா துறையை நம்பி தான் இருக்கிறது. பெரும்பாலும் சுற்றுலாவுக்கு இந்தியர்கள் அதிக அளவில் செல்லும் நிலையில் பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அதனை மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சித்திருந்தது சர்ச்சையாக மாறியது.

இது இந்தியர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்திய மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. இதன் காரணமாக மாலத்தீவு அரசாங்கம் சர்ச்சையாக பேசியவர்களை பதவியிலிருந்து தூக்கியதோடு அவர்கள் பேசியதற்காக வருத்தமும் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது மாலத்தீவின் சுற்றுலா தூதராக பிரபல இந்திய நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை கத்ரீனாவை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ் பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில் முனைவோர் என மாலத்தீவு அரசு சுற்றுலாத்துறை பாராட்டியுள்ளது.

இது பற்றி நடிகை கத்ரீனா கூறும் போது மாலத்தீவு ஒரு அழகான சுற்றுலா தளம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதட்டங்கள் தனியலாம் என்று கூறப்படுகிறது.