மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சாண்டா கிளாஸ் ஆடை அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற வேடமிட்டு ஒரு நபர் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு இந்து அமைப்பினர் சொமாட்டோ டெலிவரி ஊழியரை கட்டாயப்படுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை கலைக்க செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த இந்து அமைப்பினர் இந்துக்கள் பண்டிகையின் போது ஏன் காவி உடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ கண்டனங்களை குவித்துள்ளது.