
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர் கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சின்ன நரசிம்மன் என்பவர் அவரது கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் கீழே விழுந்த வெங்கடேசன் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே துடித்து பலியானார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சின்ன நரசிம்மனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.