கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகுரு மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் திடீரென ஒரு சிறுத்தை நுழைந்த நிலையில் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிறுத்தையைப் பிடிக்க வந்தனர். அந்த சிறுத்தை கிராம மக்களை தாக்க முயன்றது.

உடனடியாக அங்கிருந்த ஆனந்த் என்ற வாலிபர் துணிச்சலாக அந்த சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்தார். உடனடியாக அங்கிருந்த வனத்துறையினர் வலை விரித்து அந்த சிறுத்தையை பிடித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வாலிபரின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.