ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சோதனை மேற்கொண்டதில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவத்தில் அதிகாரிகள் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.