காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதலுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த நெருக்கடியின் போது பாலஸ்தீன மக்களுக்கு உதவும் 3 தொண்டு நிறுவனங்களுக்கு 2.5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும்  “காசாவிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனையின் மீது குண்டுவெடிப்பைக் கண்டு நான் திகைத்து நின்றேன், அதை மிகவும் கண்டிக்கிறேன்” என்று அவர்  ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.