ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி என்பவர் இருந்தார். இவர் வழக்கறிஞர். இவர் தற்போது திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது கொலையா இல்லை விபத்தா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.