கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து வேலையாட்களும் மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் 2 காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் மூடப்பட்டிருந்த கார் சர்வீஸ் நிலையத்திலிருந்து தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனைக் கண்ட காவலாளிகள் அருகில் இருந்த தீயணைப்பு கருவியின் மூலம் தீயை அணைக்க முயற்சித்தனர் ஆனால் தீ வேகமாக பரவியதால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

உடனே அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்தனர். இருப்பினும் தீ அதிகமாக பரவியதால் அதனை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகியது.

உடனே கன்னியாகுமரி தக்கலை தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த விபத்தில் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த 16 கார்கள் எரிந்து நாசமாகின.

மீதமுள்ள 25க்கும் மேற்பட்ட கார்கள் எந்தவித சேகமும் இன்றி தப்பியுள்ளது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சர்வீஸ் நிலையத்திற்குள் மின் கசிவு ஏற்பட்டதால் கார்களில் உள்ள பெட்ரோல் டீசல் தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.