கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் பைல்ஹொங்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாபுராவ் பொலஷெட்டியின் மகன் ராஜு பொலஷெட்டி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் தார்வாட் தாலுகாவிற்கு உட்பட்ட ராமபூர் கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே சென்ற ரயில் தண்டவாளம் அருகே, கார் ஒன்று தீப்பிடித்து எரிவதை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் உடல் முற்றிலும் கருகிய நிலையில் இருந்த ராஜுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
