சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல்
பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு வந்து சிறுமிக்கு மாத்திரையை உடைத்து உட்கொள்ளக் கொடுத்துள்ளனர். அப்போது அதற்குள் இரும்புக் கம்பி இருந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.