பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.  இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது. இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக நீங்க விரும்பியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.