
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 6 வயதுடைய சஞ்சீவி என்ற சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான்.
அதே காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நவீன்(22) என்பவரும் தங்கி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் நவீன் சிறுவனை பின்பக்க கதவு வழியாக தூக்கி சென்று விவசாய கிணற்றில் தூக்கி போட்டுள்ளார்.
மறுநாள் காலை காப்பக உரிமையாளர்கள் காணாமல் போன சிறுவனை தேடிப் பார்த்தனர். அப்போது நவீன் கிணற்றுக்கு அருகே இருந்து வருவதை பார்த்தனர். சந்தேகமடைந்து அங்கு சென்றபோது கிணற்றில் சஞ்சீவி சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைத்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.