டெல்லியை சேர்ந்த சல்மான் என்பவர் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சல்மான் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த காதலியின் தந்தை மற்றும் அண்ணன் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் நிலை குழைந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சல்மானின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமுறைவாக உள்ள காதலியின் தந்தை மற்றும் அண்ணனை தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.