
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் என்னும் பகுதியில் பெண் (24) ஒருவர் வசித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன்பின் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். பின் அவர் பெங்களூரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நாளான்று அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அதன்பின் அவர் அங்கு வந்து கொண்டிருந்த ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.