உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்,.14 ஆம் தேதி நேற்று கொண்டாடப்பட்டது. இந்தி சினிமாவில் காதலர்களாக இருந்து பிறகு, திருமண பந்தத்தில் இணைந்த பல ஜோடிகள் இருக்கின்றனர். அதன்படி இணைந்தவர்கள் தான் நடிகரான அஜய்தேவ்கனும், நடிகை கஜோலும். தமிழில் மின்சார கனவு திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் கஜோல். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காதலர் தினம் அன்று அஜய் தேவ்கன் தன் சமூகவலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அப்பதிவில் முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் உறுதியாக என் சிந்தனையில் நிறைந்த ஒன்றாக கேமரா மாறியது. என்னை பரவசப்படுத்த ஒரு போதும் தவறாததற்காக இந்த காதலர் தின பதிவை அதற்கு அர்ப்பணிக்கிறேன். எனதுலக பார்வையை மேம்படுத்தி காட்டியதற்காக அன்பிற்குரிய கேமராவுக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். போலா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இருப்பினும் கஜோல் மேடத்திற்கு ஒரு பதிவும் இல்லையே..? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.