ஆந்திர பிரதேஷ் மாநிலம் திருப்பதி வடமலை வாகாளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்து. இவர் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் காது கேளாதோர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சுமார் 50 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் நான்கு கழிவறைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் சம்பவத்தன்று யார் முதலில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பாக சந்துவுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்துவிடம் பெயிண்ட் ஆயில் ஒன்றை கொடுத்து எதிர் தரப்பு மாணவர்கள் குடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு சந்து மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த ஆயிலை சந்துவின் மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளனர். இதில் 70 சதவீதம் எரிந்த சந்துவை அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய நிலையில் சிகிச்சைக்காக ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தரமான சிகிச்சை கொடுத்து தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.