
தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி(43). இவரது மனைவி மகாலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நாளில் பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
நேற்று பிச்சைக்கனி தனது காதலியின் வீட்டில் இருந்த போது திடீரென அங்கு வந்த மகாலட்சுமி தனது கணவரை கண்டித்து வீட்டிற்கு வருமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த பிச்சைக்கனி தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால் காயமடைந்த மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மகாலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிச்சைகனியை தேடி வருகின்றனர்.
இவர் கடந்தாண்டு தனது வீட்டின் மீது ஆதரவாளரை கொண்டே பெட்ரோல் குண்டை வீசி விட்டு மர்ம நபர்கள் குண்டு வீசியதாக நாடகமாடி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.