கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ரங்கசாமி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (44) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென ரங்கசாமியை அவரது மனைவி உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் ரங்கசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கவிதாவை தேடி வந்த நிலையில் நேற்று அவரைப் போலீசார் திருப்பதியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது கறவை மாடு வைத்து அவர்கள் வியாபாரம் செய்து வரும் நிலையில் சூர்யா என்ற மகனும், வைத்தீஸ்வரி மற்றும் ராதிகா ஆகிய மகள்களும் இருக்கிறார்கள்.

இதில் வைத்தீஸ்வரிக்கு திருமணமாகிவிட்ட நிலையில் அவர் தன் கணவரது வீட்டில் இருக்கிறார். அதன்பிறகு சாதிகா ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவர்கள் நகை பணம் என மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ரங்கசாமிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மஞ்சுளா என்ற ஒரு பெண்ணுடன் வேலைக்கு சென்ற இடத்தில் தொடர்பு ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது எனக்கு தெரியவந்த நிலையில் நான் என் கணவரை கண்டித்த போதிலும் அவர் கேட்காமல் வீட்டில் இருந்த 80 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவிடம் கொடுத்ததோடு சொந்த நிலத்தையும் விற்று அவரிடம் கொடுத்துவிட்டார்.

இதனால் சொந்த வீட்டில் இருந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் இருக்கிறோம். ஒரு கட்டத்தில் என்னுடைய கணவர் சரிவர வீற்றிருக்கும் வராமல் இருந்ததோடு 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அவர் மது குடித்துவிட்டு தான் வருவார். அவர் அழகாக இல்லை அசிங்கமாக இருக்கிறாய் என்று என்னை பார்த்து கூறி அசிங்கப்படுத்துவார். நான் குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.

கடந்த 9-ம் தேதி மது போதையில் இருந்து அவர் வீட்டிற்கு வந்த நிலையில் என்னை அடித்து உதைத்துவிட்டு பின்னர் தூங்கிவிட்டார். கோபத்தில் இருந்த நான் அவரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டேன் என்று கூறினார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.