சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது காதலனுடன் வந்த நிலையில், “நாங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளோம். பாதுகாப்பு வழங்கவும்” என போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். இது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 4 மற்றும் 1.5 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளதுடன், சட்டப்பூர்வமான திருமணமும் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவரும் அங்கு வந்தார். மனைவியை பார்த்த கணவர், “தன்னுடன் திரும்ப வரவேண்டும்” என கெஞ்சினார். ஆனால் அந்த பெண், “நான் காதலனுடன் வாழ விரும்புகிறேன்” என சொல்லியபடி, கள்ளக்காதலன் கட்டிய தாலியை கழற்றி விட மறுத்துவிட்டார்.

அந்த நேரத்தில், குழந்தைகள் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தா தாய் அழுததை பார்த்த , குழந்தைகள் “அம்மா ஏன் அழறாங்க?” என கேட்க, அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர். இதனைக் கேட்ட போலீசார், காதலனின் பெற்றோரை அழைத்து, “இது உங்களுடைய மகனுக்கு சரியானதா?” என அறிவுரை கூறினர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அந்த இளைஞன் தனது பெற்றோருடன் கிளம்பி விட்டார்.

ஆனால் அந்தப் பெண் தனது காதலனே வேண்டுமென பிடிவாதம் செய்ததைத் தொடர்ந்து, அவளை கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதும் பெரும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.