
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் பராவத் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஹோட்டலுக்கு ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் வந்தார். சிறிது நேரத்தில் அங்கு வேறு சிலரும் வந்த நிலையில் அவர்களை பார்த்து பதற்றம் அடைந்த பெண் ஹோட்டல் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
பின்னர் அங்கிருந்து அந்த பெண் தப்பி ஓடிய நிலையில் அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அவர்கள் பிடித்தனர். அதாவது அந்தப் பெண் தன் கள்ளக்காதலனை சந்திக்க ஹோட்டலுக்கு வந்த நிலையில் அவரை பின்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரும் மாமியாரும் தான் வந்துள்ளனர்.
தன்னுடைய மனைவியை கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என கணவன் குடும்பத்தோடு வந்த நிலையில் அவர்களை பார்த்த மனைவி ஹோட்டல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் ஆண் நண்பர் சிக்கிக்கொண்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கணவன் தன் மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ஆனால் தன் மீது போலியாக புகார் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது போலீசார் பெண்ணிடம் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏஏற்படுத்தியுள்ளது.